தேசிய செய்திகள்

நேரு குடும்பத்தை அவதூறு செய்ததாக கைதான நடிகை பாயல் ஜாமீனில் விடுதலை

நேரு குடும்பத்தை அவதூறு செய்ததாக கைதான நடிகை பாயல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

இந்தி நடிகை பாயல் ரோகத்கி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், நேரு-இந்திரா குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் அவரை நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் பண்டி நகர போலீசார் கைது செய்தனர். பாயலை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே, அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, பண்டியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் அவருடைய வக்கீல் மனுதாக்கல் செய்தார். இதை ஏற்று தலா ரூ.25 ஆயிரத்துக்கான இருநபர் ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து