கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கில் விசாரணை தள்ளிவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கில் விசாரணை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்.ஜி.டி.) தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வினீத் சரண், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது; மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பே முக்கியம் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு நீதிமன்றத்தில் வாதிட்டு வருவதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பார்ட்டி கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்