தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் மே 1 முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1-ந் தேதி, முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை,

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12-ந் தேதியில் இருந்து இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் 300 ரூபாய் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதன் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.300 தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து குறைத்து தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்