தேசிய செய்திகள்

மராட்டிய மாநில விவகாரம்: ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல் - ப.சிதம்பரம் கண்டனம்

மராட்டிய மாநிலத்தில் நடந்த விவகாரம் ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நவம்பர் 23-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை, மராட்டிய மாநிலத்தில் அரசியல் சட்டம் அதிர்ச்சிகரமாக மீறப்பட்டது. இந்த சம்பவம், அரசியல் சட்ட தினத்தையொட்டி, மக்களின் மனதில் எப்போதும் நினைவில் இருக்கும். இந்த சம்பவம், ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல். மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய ஜனாதிபதியை அதிகாலை 4 மணிக்கு எழுப்பி, கையெழுத்திட வைத்துள்ளனர். காலை 9 மணிவரை ஏன் காத்திருக்க முடியவில்லை?

இந்த நேரத்தில், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு எனது வாழ்த்துகள். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் அடிப்படையில், கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியை கண்டவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

தனிப்பட்ட கட்சி நலன்களை ஒதுக்கிவிட்டு, 3 கட்சிகளின் பொதுநலன்களை அமல்படுத்த ஒன்றாக பாடுபடுமாறு இந்த கூட்டணியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்