தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...! பெண் அதிகாரிகளை ராணுவ நிரந்தர ஆணையத்தில் சேர்க்க ஒப்புதல்

நிரந்தர ஆணையத்தில் சேர்க்கப்படுவதன் மூலம் பெண் அதிகாரிகள் இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு செல்லலாம்.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளில் 11 பேர், இந்திய ராணுவத்தின் நிரந்தர ஆணையத்தில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்திய இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. நிரந்தர ஆணையத்தில் அவர்களை சேர்த்திட நவம்பர் 26ம் தேதி வரை கெடு விடுத்திருந்தது. அதனால் அந்த 11 பெண் அதிகாரிகளையும் நிரந்தர கமிஷனில் சேர்த்திட இந்திய இராணுவம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது.

நிரந்தர கமிஷனில் சேர்க்கப்படுவதன் மூலம், பெண் அதிகாரிகள் இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு செல்லலாம். அதன்படி அவர்கள் சிறப்பு பயிற்சிகள் மற்றும் சவாலான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வர்.

2020ம் ஆண்டு டிசம்பர் முதல், ஜூனியர் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கமிஷனில் சேருவதற்கு குறைந்தது 10 வருடங்களாவது பணியாற்றி இருக்க வேண்டும்.

முன்னதாக இந்திய ராணுவத்தில் உள்ள 10 பிரிவுகளின் கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்காகவும் நிரந்தர ஆணையம் அமைத்திட ஆணையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு