தேசிய செய்திகள்

எதிர்காலக் கல்விக்கு ஏஐ, ஆட்டோமேஷன் அவசியம்: பிரதமர் மோடி

இந்தியா ஒரு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறினார்

புது டெல்லி,

வளர்ச்சி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து பட்ஜெட்க்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் போன்ற பாடங்களில் கவனம் செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். நமது கல்வி முறையை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் செயல்முறையை நாம் இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆட்டோமேஷன், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி போன்ற பாடங்களில் நமது கவனத்தை அதிகரிக்க வேண்டும்.

இந்தியா ஒரு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. மேலும் இன்று தடுப்பு மற்றும் முழுமையான ஆரோக்கியம் என்ற எதிர்கால வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் சுகாதாரக் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் ஆரோக்கிய மந்திர்கள் மூலம், சுகாதார சேவைகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு அப்பால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் புதிதாக ஏதாவது சாதிக்க விரும்புகிறார்கள். இளைஞர்களின் விடாமுயற்சி நமக்கு மிகப்பெரிய பலம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.