புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப் பான டி.ஆர்.டி.ஓ. நடத்திய 'விமர்ஷ் 2026' நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 2047-க்குள் முக்கிய தொழில்நுட்பங்களில் தற்சார்பு. உள்நாட்டு உற்பத்தி மற்றும் ராணுவ ஏற்றுமதியை பலமடங்கு அதிகரித்து, உலகளாவிய வினி யோகச் சங்கிலியில் இந்தியா வலுவான இடத்தை பெற வேண்டும்.
எதிர் கால போரில் செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களே முக்கிய பங்கு வகிக்கும். இன்றைய கற்ப னையே நாளைய ராணுவ திறனாக மாறும் என்பதால், எதிர்கால தொழில் நுட்பத்தை இன்றே உருவாக்க வேண்டும். ராணுவத் துறையில் டி.ஆர்.டி.ஓ., பெரிய நிறுவனங்கள், குறு-சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து ஆராய்ச்சி முதல் உற்பத்தி வரை செயல்பட வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.