Image via aicte-india.org 
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு..!

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின்கீழ் வரும் கல்வியாண்டு முதல் (2022-23)பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.ஐ.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது. இதனால் மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆர்கிடெக் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்