தேசிய செய்திகள்

6-12 வயதினருக்கான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.

ஆனால் 2 முதல் 18 வயதினருக்கு இந்த தடுப்பூசியை போடும்முன், ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இதற்கான மருத்துவ பரிசோதனையை முடிக்க வேண்டும். மூன்று கட்டமாக நடைபெறும் அந்த பரிசோதனையில் 12-18, 6-12, 2-6 வயது பிரிவுகளில் தலா 175 தன்னார்வலர்களுக்கு மருந்து செதுத்தி பரிசோதிக்கப்படும். இதில் 2-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கடந்த மே 12-ந் தேதி அனுமதி அளித்தார்.

அதன்படி, 12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 6-12 வயது பிரிவில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி டெல்லி எய்ம்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்