தேசிய செய்திகள்

கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்

விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டொலோய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பகல் 12.20 மணிக்கு திப்ருகார் விமான நிலையத்திற்கு செல்வதற்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானம் 1.25 மணிக்கு திப்ருகார் சென்றடையும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அதன் இறக்கை பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த விமானம் உடனடியாக கவுகாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த விமானத்தில் பொறியாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தனர். இதையடுத்து அந்த ஏர் இந்தியா விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்