தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு ‘சுகாதார அவசரநிலை’ மாநிலமாக டெல்லி அறிவிப்பு; பள்ளிகளை மூட அறிவுரை

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ள நிலையில் சுகாதார அவசரநிலை மாநிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று சுகாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம், காற்று மாசுபாடு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தெளிவான வானிலையின்மை பனி காரணமாகவே, புகைமூட்டம் காரணமாக இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

இருப்பினும் தீபாவளிக்கு பின்னர் புதுடெல்லியில் காற்றின் தரம் அளவு என்பது இரண்டாவது முறையாக மோசமான நிலையை கடந்து உள்ளது. வெளிப்புற காற்றின் தரத்தை நிர்ணயம் செய்யும் காற்று தர குறியீடு (ஏகியூஐ) டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காலை 9.30 மணியளவில் 446 ஆக பதிவாகி உள்ளது. தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் உள்ள 19 மையங்களில், 12 மையங்களில் காற்று சுகாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதை காட்டி உள்ளது. குர்கானில் குறைவாக 9.30 மணியளவில் 357 ஆக பதிவாகி உள்ளது. புகை பனி மூட்டம், காற்று மாசுபாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

அரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளை ஒரு மணி நேரம் தாமதமாக திறக்க கேட்டுக் கொண்டு உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 9-ல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. நீண்ட தொலைவு செல்லும் ரெயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பனிமூட்டம் காரணமாக தெளிவின்மை நிலை காணப்படுவதால் ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இந்திய மருத்துவ சங்கம் டெல்லியை ஒரு பொது சுகாதார அவசரநிலை மாநிலமாக அறிவித்து உள்ளது. பள்ளிகளை மூடவும் சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது, பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டு உள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது. தெளிவான வானிலையின்மை காரணமாக விமான ஓடுதளம் மூடப்பட்டது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் டெல்லியில் காற்று மாசு மிகவு மோசமான நிலையை அடைந்து உள்ளது என விமர்சனம் செய்து உள்ளார். இதற்கு அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் கூறிஉள்ளார்.

7 விமானங்கள் கால தாமதமாகி உள்ளது, லக்னோவில் இருந்து சென்ற விமானம் ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

ரெயில் சேவையிலும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே டெல்லியில் மோசமான வானிலை காரணமாக பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அறிவிக்கவும் கல்வி துறை மந்திரி மணிஷ் சிசோடியா அறிவுரை வழங்கி உள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம்

தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் மோசமான காற்று மாசுபாடு ஏற்பட்டு உள்ளதற்கு டெல்லி, அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை கடுமையாக சாடிஉள்ளது. இன்று ஏற்பட்டு உள்ள அவசரகால நிலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவியுங்கள் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்