மும்பை
தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். ஆத்திர அவசரத்திற்குக் கூட மற்றவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார். பின்னர் படிப்படியாக சரிசெய்யப்பட்டது, தற்போது சிக்னல் கிடைக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஏர்செல்லுக்கும், டவர் நிறுவனங்களுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் கூறும் போது,
தற்போது மீண்டும் ஏர்செல் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் ஏர்செல் சிம் மட்டும் வைத்திருப்பவர்கள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு ஏர்செல் சிம்மை உபயோகிப்பவர்கள் வேறு நெட்ஒர்க்கிற்கு மாற்றிக்கொள்வது நல்லது. முடிந்தவரையில் எங்கள் சேவையை தொடர நங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
தற்போது ரூ.15 .5 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டதால் ஏர்செல் நிறுவனத்தை திவால் என அறிவிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (National Companies Law Tribunal ) ஏர்செல் சார்பில் மனு செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.