தேசிய செய்திகள்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் வந்தது. ப.சிதம்பரம் ஆஜரானதை அடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைதுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நவம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்