புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய மனுவில் அவர் சார்பில் கபில்சிபில் ஆஜரானார்.
முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ப.சிதம்பரத்தை கைது செய்ய பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை விதித்தது பாட்டியாலா நீதிமன்றம்.ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரிய மனு ஜூன் 5க்கு ஒத்திவைக்கபட்டது. அதுவரை அவரை கைது செய்ய தடை விதித்து உள்ளது.
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.