தேசிய செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட தனியார் விமான நிறுவன இணையதளத்தில் ஊடுருவல்

புதிதாக தொடங்கப்பட்ட தனியார் விமான நிறுவன இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆகாசா ஏர் என்ற புதிய தனியார் விமான நிறுவனம், கடந்த 7-ந்தேதி தனது விமான போக்குவரத்தை தொடங்கியது. அதற்குள் அதன் இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளனர்.

அவர்கள் பயணிகளின் பெயர், பாலினம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பார்வையிட்டு இருக்கலாம் என்று ஆகாசா ஏர் நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தவிர, பயண தகவல்கள், பயண பதிவுகள், பணம் செலுத்திய தகவல்கள் ஆகியவற்றை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தனது இணையதளத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி உள்ளது. மேலும், இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழுவிடம் புகார் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு