தேசிய செய்திகள்

அனைத்து கட்சிகளும் மின்னணு வாக்கு எந்திர தேர்தல் முறையை எதிர்க்க வேண்டும் - பிரியங்கா காந்தி வேண்டுகோள்

மின்னணு வாக்கு எந்திர தேர்தல் முறையை மறுபரிசீலனை செய்வதற்கு அனைத்து தேசிய கட்சிகளும் வற்புறுத்த வேண்டும் என பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவருடைய காரில் மின்னணு வாக்கு எந்திரம் இருந்ததாக வீடியோ படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின. இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பரவி உள்ள வீடியோவும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது;-

ஒவ்வொரு தடவையும் தேர்தல் நடக்கும் போது இதுபோன்ற சம்பவம் நடந்து வருகின்றன. தற்போது மின்னணு வாக்கு எந்திரம் இருந்ததாக கூறப்படும் கார் பா.ஜனதா வேட்பாளருடையதாக இருக்கலாம். அல்லது அவருடைய ஆதரவாளருடைய காராக இருக்கலாம்.

ஆனால் இதை மறுப்பார்கள். இதை வெளிப்படுத்திய நபரை பா.ஜனதாவின் ஊடகங்கள் திருப்பி குற்றம்சாட்டும். அவருக்கு தீங்கு இழைக்கப்படும். இதுபோல பல குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே பதிவானாலும் அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதைய புகாரில் தேர்தல் ஆணையம் தீர்க்கமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை