தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமாவு ஜன.31-இல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முமு உரையாற்ற உள்ளார். அவரது உரையைத் தொடாந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது

2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிமலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடா சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளா. நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

இதைத் தொடாந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அவைக் குழு தலைவாகள் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. இதில், எதிக்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை எதிகொள்வதற்கான வியூகம், கூட்டணி கட்சிகள் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்