தேசிய செய்திகள்

“வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும்” - அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் அம்மாநில காவல்துறையினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளம் மிக்க நாடாக மாறும் போது, அசாமில் உள்ள இளைஞர்கள் அதன் மூலம் பயனடைவார்கள். வடகிழக்கின் அனைத்து தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அசாம் மாநிலம் வெள்ள பாதிப்பு இல்லாத மாநிலமாக விரைவில் மாறும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செய்து கொள்ளப்பட்டன. தற்போது அசாமில் எந்தவித தீவிரவாத இயக்கமும் செயல்பாட்டில் இல்லை.

தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், தேசிய நீரோட்டத்தில் சேர்ந்து ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். அண்டை மாநிலத்துடனான எல்லை பிரச்சினைக்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு