தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் திறமைக்கு ஏற்ப மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு- ஈசுவரப்பா கருத்து

கர்நாடகத்தில் திறமைக்கு ஏற்ப மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரி சபை கடந்த 4-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. 29 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். நேற்று அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவமொக்காவில் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களிடம் கூறுகையில், எம்.எல்.ஏ.க்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப இலாகாக்களை முதல்-மந்திரி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கிய துறைகளில் மந்திரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். சிவமொக்கா மாவட்டத்தில் இருந்து நானும், அரகா ஞானேந்திராவும் மந்திரியாக தேர்வாகி உள்ளோம். இதில் எனக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அரகா ஞானேந்திராவுக்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து