தேசிய செய்திகள்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் அமரிந்தர் சிங் சந்திப்பு

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் பஞ்சாப் முன்னாள் முதல்-மாந்திரி அமரிந்தர் சிங் சந்தித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங் உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று அவர் தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவை தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். இந்த நிலையில் அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணையவுள்ளார். தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இன்று இணைத்துக் கொள்கிறார்.

பாஜகவில் இணையவுள்ள நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங். இன்று மாலை அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ள நிலையில் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்