தேசிய செய்திகள்

கரையை கடந்து வரும் ஆம்பன் புயல்; ஒடிசா, மேற்கு வங்காளத்தில் 6.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஆம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் 6.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தேசிய பேரிடர் மேலாண் படை தலைவர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் நகரில் மழைப்பொழிவுடன், கடுமையான காற்று வீசி வருகிறது. ஆம்பன் புயல் கடந்த 2.30 மணி முதல் கரையை கடந்து வருகிறது. புயல் கரையை கடப்பதற்கு தொடர்ந்து 4 மணிநேரம் வரை ஆகும்.

ஆம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண் படை தலைவர் எஸ்.என். பிரதான் கூறும்பொழுது, மேற்கு வங்காளத்தில் இருந்து 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் மற்றும் ஒடிசாவில் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 640 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

பானி புயலில் ஏற்பட்ட அனுபவத்தினால், மரம் வெட்டும் கருவிகள், மின்கம்பங்கள் வெட்டும் கருவிகள் ஆகியவற்றை அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைத்துள்ளன. தேவைப்பட்டால் அவை உபயோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு