புதுடெல்லி,
தமிழகத்தில் இன்று பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களின் கடைசி மாதமான பங்குனியில் முருகப்பெருமானுக்கு விழா எடுக்கும் பங்குனி உத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. இன்றைய தினத்தில் மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
இந்த நிலையில் தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழில் பங்குனி உத்திர திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வேல்! வீர வேல்! என்று பதிவிட்டுள்ளார்.