கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு - தொற்றால் 3 பேர் பலி

இந்தியாவில் நேற்று மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 1,223 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 628 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தினசரி பாதிப்பு 1.02 சதவீதமாக பதிவாகி உள்ளது. தொற்றில் இருந்து நேற்று 2,252 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 983 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515 ஆக குறைந்துள்ளது.

தொற்றினால் கடந்த பல நாட்களாக இரண்டு இலக்கத்தில் இறப்பு பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 14 பேர் இறந்தனர். நேற்று பஞ்சாப்பில் 2 பேர், மேற்கு வங்காளத்தில் ஒருவர் என நாட்டில் 3 பேர் மட்டுமே தொற்றால் பலியாகினர். தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு