கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

அரசு பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத்தேர்வு கிடையாது- ஆந்திர அரசு அதிரடி

ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

விஜயவாடா,

குரூப் 1 உள்பட அனைத்து விதமான அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் இனி நேர்முகத்தேர்வு கிடையாது என்று ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதன்படி,ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது.

முன்னதாக, குரூப்-1 தேர்வு தவிர ஏனைய அனைத்து பணிகளுக்குமான தேர்வுக்ளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படாது என்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், குரூப் 1 தேர்வுகளுக்கும் நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு