தேசிய செய்திகள்

ஆந்திராவில் துப்பாக்கி சண்டை: 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலி

ஆந்திராவில் நடந்த துப்பாக்கி சண்டையில், 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலியாகினர்.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய பகுதியில் ஆந்திர மாநில நக்சலைட் எதிர்ப்பு படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிலேரு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கும்மிரேவுலா என்ற இடத்தின் அருகே சென்ற போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலியானதாக விசாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு பாபுஜி அட்டடா தெரிவித்தார். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு