தேசிய செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரூ.40 ஆயிரம் கோடி கடனாக பெற்று மோசடி செய்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2017-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.5 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்தது. இதனை திரும்பி கொடுக்க தவறியதால் இந்த முதலீடு வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுநிதியான ரூ.11 ஆயிரம் கோடி, யெஸ் வங்கி மூலமாக மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மடைமாற்றப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

2010-2012 காலத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரூ.40 ஆயிரம் கோடி கடனாக பெற்று மோசடி செய்தது. இதுதொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகள் மூலமாக அனில் அம்பானியின் ரூ.12 ஆயிரம் சொத்துகள் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன. தற்போது மேலும் புதிதாக ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,885 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதாக தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்