தேசிய செய்திகள்

சிறுத்தை பீதியால் அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு

சிறுத்தை பீதியால் அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கொப்பல்:

கொப்பல் மாவட்டம் கங்காவதி டவுன் அருகே அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அஞ்சனாத்திரி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுத்தை அந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிவதாக வந்த தகவலை அடுத்து கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள நடைபாதையில் சிறுத்தைகள் நடமாட்டத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து