புதுடெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 23-வது நாளாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்தநிலையில், மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாயமானவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.