விஜயவாடா:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்மணி, இங்கிலாந்தில் இருந்து டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவரது சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து தப்பிய அவர், தன்னை வரவேற்க டெல்லி வந்திருந்த மகனுடன் டிசம்பர் 22-ம் தேதி ரெயில் மூலம் ராஜமுந்திரி தப்பிவிட்டார்.
அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தாயும், மகனும் டெல்லி - விசாகப்பட்டினம் விரைவு ரெயிலில் ராஜமுந்திரி வந்தனர். ரெயில் நிலையத்திலேயே அவர்களை பிடித்த சுகாதாரத் துறையினர், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மகனுக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்தது. எனினும் தற்போது தாயும்- மகனும் அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த் பெண்ணுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இருவரையும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
தாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி, அவருக்கு அதிதீவிர கொரோனா பபாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வுக்குள்படுத்தினர். அதில் அந்த பெண்மணிக்கு புதிய தீவிர கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு வந்த 10 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு கடந்த சனிக்கிழமை வரை இங்கிலாந்திலிருந்து 1,216 பே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. அவாகளில் 1,187 பேரின் விவரங்கள் தெரிய வந்ததை அடுத்து அவாகளுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 பேருக்கு புதிய ரக தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அவாகளின் மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு புனே மற்றும் பெங்களூரில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குண்டூ மாவட்டத்தில் இருவா, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, அனந்தபுரம், நெல்லூ உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தலா ஒருவா ஆகியோருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த 6 பேரின் குடும்ப உறுப்பினாகளில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவாகளில் 3 பே குண்டூரிலும், ஒருவா நெல்லூரிலும் உள்ளனா. ஒட்டுமொத்தமாக, ஆந்திரத்தில் மொத்தம் 10 பே புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா. அதேபோல் லண்டனிலிருந்து ஐதராபாத் திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.