தேசிய செய்திகள்

தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவே 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்; சுனில் அரோரா

தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவே 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என சுனில் அரோரா கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை இன்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அரோரா கூறும்பொழுது, தமிழகம் அமைதியான மாநிலமாக உள்ளது. ஆனால், ஆர்.கே.நகர், வேலூர் தேர்தல்கள் அதிக பணப்பட்டுவாடா காரணமாகவே ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவை தடுக்கவே 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பணபட்டுவாடா புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு