தேசிய செய்திகள்

சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராய்ச்சூர் மாவட்டம் தெலுங்கானாவுக்கு சேர வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பேசி இருப்பது சரியல்ல. அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவை இல்லை. கர்நாடகத்தில் நிலம், நீர், மொழி, கலாசாரத்தை பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை. அந்த பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

குடகு மாவட்டத்தில் சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த சம்பவம் துரதிஷ்டமானது. ஜனநாயகத்தில் அனைவரும் அமைதி வழியில் போராட உரிமை உண்டு. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால் யாராக இருந்தாலும் நாங்கள் விட மாட்டோம்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்