தேசிய செய்திகள்

முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் இன்றிரவு ஜப்பான் பயணம்

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நோக்கில் அவருடைய இந்த பயணம் அமைகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகிக்கும் அனில் சவுகான் இன்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜப்பான் நாட்டுக்கு செல்கிறார். இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நோக்கில் அவருடைய இந்த பயணம் அமைகிறது.

இந்த பயணத்தில், ஜப்பானின் மூத்த ராணுவ தலைவர்களை நேரில் சந்தித்து உரையாட திட்டமிட்டு உள்ளார். அந்நாட்டின் ராணுவ அமைப்புகள் மற்றும் நிறுவனங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

அவருடைய இந்த பயணத்தின்போது, ஜப்பானின் பாதுகாப்பு படையின் ஜெனரல் யோஷிடா யோஷிஹிடேவை சந்தித்து பேசுகிறார். பாதுகாப்பு படிப்புகளுக்கான தேசிய மையத்தின் துணை அதிபர் மற்றும் ஜப்பானின் மேஜர் ஜெனரலான அடாச்சி யோஷிகியையும் அவர் சந்தித்து பேச இருக்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு