ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். இதைக்கவனித்த ராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர் ஒருவரும் மரணம் அடைந்தார். இரு வீரர்கள் காயம் அடைந்தனர். மோசமான வானிலை காரணமாக காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.