தேசிய செய்திகள்

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். இதைக்கவனித்த ராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ராணுவ வீரர் ஒருவரும் மரணம் அடைந்தார். இரு வீரர்கள் காயம் அடைந்தனர். மோசமான வானிலை காரணமாக காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை