தேசிய செய்திகள்

அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாயம்

அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரகாஷ் சிங் ராணா 13 நாட்களாக காணவில்லை.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனை சேர்ந்த ராணுவ வீரரான பிரகாஷ் சிங் ராணா, அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீனா எல்லையில் உள்ள தக்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் பிரகாஷ் சிங் ராணாவை காணவில்லை என தெரிகிறது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து அவரது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். ராணுவ வீரரை 13 நாட்களாக காணவில்லை என்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...