தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது: குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் இடைத்தரகர் மனு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர், தனது குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் மனு அளித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அவர் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினரிடமும், வக்கீல்களிடம் தொலைபேசியில் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்