இட்டாநகர்,
அருணாச்சலபிரதேச மாநிலம் பாபம் பாரே மாவட்டம் நஹர்லஹன் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த விஜய் பராக் (வயது 30) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பராக் இடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.