தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.. முதல்-மந்திரி அசோக் கெலாட்

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்தார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் நேற்று மாநில வனவிலங்கு வாரியக் கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. சிறுத்தை, சிட்டல், மான், கர்மோர் உள்ளிட்ட பிற வன விலங்குகளின் எண்ணிக்கையும் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. "வனவிலங்கு பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை" என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் அக்டோபர் 2-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வன உயிரின வார விழா நடத்தப்படும். காடுகள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக, வனவிலங்கு ஆர்வலர்கள், நிபுணர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புடன் தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது.

சாம்பார் ஏரி சதுப்பு நிலப் பாதுகாப்பிற்காக சட்டவிரோத குழாய் கிணறுகளை அகற்றவும், மாநிலம் முழுவதும் உள்ள மற்ற பகுதிகளில் சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் பணியை விரைவுபடுத்தவும் முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்