தேசிய செய்திகள்

ராணுவ வீரர் படுகொலை; மைத்துனருக்கு வலைவீச்சு

பாகல்கோட்டையில் ராணுவ வீரரை படுகொலை செய்த அவரது மைத்துனரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா நிரலகேரி கிராமத்தை சேர்ந்தவர் கரி சித்தப்பா (வயது 25). ராணுவ வீரர். இவரது மனைவி வித்யா. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். இந்த நிலையில், விடுமுறையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கரி சித்தப்பா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே வைத்து கரி சித்தப்பாவுக்கும், அவரது மனைவியின் சகோதரரான சித்தனகவுடாவுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த சித்தனகவுடா தன்னிடம் இருந்த கத்தியால் கரி சித்தப்பாவை சரமாரியாக குத்தினார்.

இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கரி சித்தப்பாவுக்கும், வித்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால், மைத்துனர் சித்தனகவுடா, கரி சித்தப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கெரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தனகவுடாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்