30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணிக்கும்,காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரி (30 தொகுதிகள்): 17.41 சதவீதம் வாக்குப்பதிவு
கேரளா (140 தொகுதிகள்): 16.23 சதவீதம் வாக்குப்பதிவு
அசாம் (126 தொகுதிகள்) : 17.87 சதவீதம் வாக்குப்பதிவு
கேரள கண்ணூரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பொய் பிரச்சாரத்தால் இடதுசாரி ஜனநாயக முன்னணியை தோற்கடிக்க முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம், மக்களும் எங்களை நம்புகிறார்கள்.. கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் பயணித்து வருகிறோம், அந்த பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம், மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்... மதவாதப் பிரச்சாரத்தால் எங்களைத் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை நீலா என்ற ரோபோ வரவேற்கிறது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்க்கன வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், பல்வேறு வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திலேயே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டியும், நடிகர் மோகன்லாலும் வாக்களித்தனர்.
கேரளாவில் 140 தொகுதிகளில் 883 வேட்பாளர்கள் போட்டியிடும்நிலையில், 2.71 கோடி வாக்காளர்கள் 30,471 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.
3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, நமது இளைஞர்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
2026 அசாம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அசாம் மக்கள் பெருமளவில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்தத் தேர்தலை ஜனநாயகம் மற்றும் பொதுக் கடமையின் கொண்டாட்டமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.
2026 சட்டசபை தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளாவின் ஜனநாயக உணர்விற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
126 தொகுதிகளை கொண்ட அசாமில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கூட்டணியும், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன. இங்கு மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிக்கும்,காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. முன்னதாக அங்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில், மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது.
வாக்குப்பதிவுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப்படையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, தேர்தல் நடைபெறும் இந்த மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.