புனே
டெல்லிக்கு செல்ல புனே விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்திய விமானம் ஏ -321 பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் மணிக்கு 222 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுபாதையில் இருந்து டேக் ஆப் ஆகி கொண்டு இருந்தது. அப்போது ஓடுபாதை நடுவே ஒரு ஜீப் மட்டும் ஒரு நபரும் இருப்பதை கண்ட பைலட் சாமர்த்தியமாக விமானத்தை திருப்பினார். இதனால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் விமானத்தின் வால்பகுதி ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதி உருகி சேதமடைந்தது.
ஏ 321 விமானம் புனே விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை புறப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை இப்போது விமான ஒழுங்குமுறை, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்து வருகிறது.
புனே விமான நிலையம் ஒரு இந்திய விமானப்படை விமானநிலையமாகும், இது நாட்டின் பல விமான நிலையங்களைப் போலவே, ஆயுதப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் விதிகளை பாதுகாக்குமாறு சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இந்திய விமானப்படையை கேட்டுள்ளது.
அதன் பகுப்பாய்விற்காக காக்பிட் குரல் ரெக்கார்டரை (சி.வி.ஆர்) தருமாறு ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று விமானம் டெல்லியில் தரையிறங்கிய பின்னர் டி.ஜி.சி.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை நடத்திய அதிகாரி, "விமானம் விசாரணைக்காக சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் ஏதேனும் இருப்பதை கண்டுபிடிக்க ஏர் இந்தியா புனே ஏடிசி (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு) உடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.