தேசிய செய்திகள்

2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் - வங்கிகள் நடவடிக்கை

2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மையங்களில் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது என இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மக்களுக்கு சிரமமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இப்படி ஒரு அறிவுறுத்தலை வங்கிகளுக்கு வழங்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். எனினும் இது தொடர்பாக தன்னிச்சையாகவே இந்த முடிவை பெரும்பாலான வங்கிகள் எடுத்திருந்தன.

அதன்படி தற்போது ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பணிகளை வங்கிகள் தொடங்கி உள்ளன. ஒருசில வங்கிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், பிற வங்கிகளும் விரைவில் இந்த நடவடிக்கையை தொடங்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து