தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்தில் லட்சுமி பூஜை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் லக்‌ஷ்மி பூஜை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான மொமின்பூரில் லட்சுமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், லட்சுமி பூஜையில் பங்கேற்றவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் ஏராளாமன மக்கள் காஇந்த சம்பவத்தை அம்மாநில பாஜக சுகந்த மஜும்தர் வீடியோ எடுத்து வெளியிட்டு, இந்த தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, மொமின்பூர் வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையை அனுப்புமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுகந்த மஜும்தர் கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் லக்ஷ்மி பூஜை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு