தேசிய செய்திகள்

ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை

துமகூருவில் ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

துமகூரு:

துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகா முச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திவாகர் (வயது 32). இவர் ரவுடி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு திவாகர் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திவாகரை வழிமறித்த மர்மநபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தாக்கி திவாகரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திப்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலை சம்பவம் குறித்து திப்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு