தேசிய செய்திகள்

சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; மத்திய அரசு வலியுறுத்தல்

ஈரான் - அமெரிக்கா மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

டெல்லி,

ஈரான் - அமெரிக்கா மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

தாக்குதல்

அந்த வகையில் ஹர்முஸ் ஜலசந்தியில் ஓமன் அருகே சென்றுகொண்டிருந்த 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான இந்த 2 கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த இந்திய மாலுமி உயிரிழந்தார். மேலும், 10 இந்திய மாலுமிகள் படுகாயமடைந்தனர்.

வலியுறுத்தல்

இந்நிலையில், சரக்கு கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT