தேசிய செய்திகள்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி; போலீசார் தடுத்து நிறுத்தியதால் இந்து அமைப்பினர் வாக்குவாதம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி செய்தனர். தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

ஈத்கா மைதானம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியில் ஈத்கா மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் பக்ரீத், முகரம் பண்டிகையின் போது முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் இந்து பண்டிகைகளை கொண்டாடவும் அனுமதி வழங்க வேண்டும் என்று சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் அரசுக்கு கோக்கை விடுத்தனர். ஆனால் வக்பு வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே ஈத்கா மைதானம் கர்நாடக அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று மாநகராட்சி கூறியதால் மைதான விவகாரம் விசுவரூபம் எடுத்தது. இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதி கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

போலீசாருடன் வாக்குவாதம்

மேலும் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதித்த நீதிபதிகள், முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சாம்ராஜ்பேட்டை மைதானத்தின் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில், விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்பினர் வழிபட முயன்றனர்.

இதுபற்றி அறிந்த போலீசார் கோவிலுக்கு சென்று விநாயகர் சிலை வைத்து வழிபடுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார், இந்து அமைப்பினர் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் ஒருவழியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்