கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

போபால்,

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக போபாலில் நடந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காய்ச்சல் காரணமாக பாதியிலேயே அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்து வந்த அனைவரும் அருகிலுள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று அதில் ஜோதிராதித்ய சிந்தியா பதிவிட்டுள்ளார். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை