தேசிய செய்திகள்

அயோத்தி விவகாரம்: முஸ்லிம் வாரிய பொதுச்செயலாளருடன் சமரச குழு சந்திப்பு

அயோத்தி விவகாரம் தொடர்பாக, முஸ்லிம் வாரிய பொதுச்செயலாளருடன் சமரச குழுவினர் சந்தித்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரச குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உள்ளது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரெஹ்மானியை நேற்று சந்தித்து பேசினர். அதன்படி சமரச குழுவின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான இப்ராகீம் கலிபுல்லா, உறுப்பினர் வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் ரெஹ்மானியை சந்தித்தனர். குழுவின் மற்றொரு உறுப்பினரும், ஆன்மிக குருவுமான ரவிசங்கர் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சந்திப்பை ரெஹ்மானி உறுதி செய்தார். அவர் மேலும் கூறுகையில், சமரச விவகாரத்தை பொறுத்தவரை, இந்த குழுவுக்கு உதவி செய்ய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்களுக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை என்று தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்