தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 7-வது நாளாக விசாரணை

சுப்ரீம் கோர்ட்டில், 7-வது நாளாக அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது? என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு முன்பு 7-வது நாளாக நடைபெற்றது.

அப்போது ராம் லல்லா தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் 3-வது நாளாக ஆஜராகி, தொல்லியல் ஆய்வுத் துறையின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி வாதாடினார். சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோவில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்றும் அப்போது அவர் கூறினார். இஸ்லாமிய அமைப்பின் தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவான் ஆஜராகி வாதாடினார். பின்னர் வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்