தேசிய செய்திகள்

பிஎப்ஐ அமைப்பிற்கு தடை ; மத்திய அரசு சரியான முடிவை எடுத்துள்ளது - மராட்டிய முதல் மந்திரி வரவேற்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்கு மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடி தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்கு மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு  நாட்டில் இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப எந்த உரிமையும் இல்லை.  உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் இது தொடர்பாக மத்திய அரசு சரியான முடிவை எடுத்துள்ளது. இது தேசபக்தர்களின் நாடு என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்குமத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு மராட்டிய முதல் மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை