தேசிய செய்திகள்

பெங்களூருவில் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை - போலீஸ் கமிஷனர் உத்தரவு

பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்க தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவில் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளதையடுத்து, முக்கிய பகுதிகளில் 4 நாட்கள் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

பெங்களூரு அல்சூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு உற்சவத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏப்ரல் 11-ந் தேதி (இன்று), 12-ந் தேதி (நாளை) அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல முத்தியாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி கமர்சியல் தெரு, புலிகேசிநகர், சிவாஜிநகர், டி.ஜே.ஹள்ளி ஆகிய போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13, 14-ந் தேதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து